ஞாயிறு, 5 பிப்ரவரி, 2012

المسلمون يصلون في كل مكان Muslims pray in every place

தொழுகை மிக முக்கியமான கடமை,அதை எந்த சூழ்நிலையிலும் விடுவதற்கு அனுமதி இல்லை,மனிதன் தன் சுய நினைவில் இருக்கும் வரை அதை நிறைவேறியே ஆக வேண்டும் அபாயங்கள் நிறைந்த போரிலும் கூட தொழுகை நேரம் வந்தால் அதை விட்டு விடாமல் எவ்வாறு தோழ வேண்டும் என்ற சட்டத்தை குர்ஆனில் அல்லாஹ் கூறியதிலிருந்தே அதன் முக்கியத்துவம் புரிகிறதல்லவா?

தொழுகை கடமையாக்கப்பட்ட காலம் இடம் எது என கவனித்தாலே அதன் முக்கியத்துவம் நமக்கு விளங்கும்.
நபி [ஸல்]அவர்களின் மக்கா வாழ்வில் மார்க்க பிரச்சாரத்தை செய்து கொண்டிருந்த சமயம் அதனால் ஏற்பட்ட துன்பங்கள் என்ன என்று நமக்கெல்லாம் நன்றாக தெரியும் அப்போது நபிக்கு பெரிதும் உதவியாக இருந்தவர்கள் இருவர் [1]அபூதாலிப் [2]அன்னை கதீஜா[ரலி]ஆவர்.
இவ்விருவரும் மரணமடைந்த சமயம் காபிர்கள் அன்னாருக்கு இன்னும் அதிக துன்பங்களை கொடுக்க ஆரம்பித்தனர்,

இதை அடுத்து தாயிப் என்ற ஊருக்கு சென்று பிரச்சாரம் செய்ய சென்ற போது ஏற்பட்ட துயரங்கள் மிக கடுமையானவை,இவ்வாறு பல வகையில் உடலாலும் மனதாலும் பாதிக்கப்பட்டு கொண்டிருந்த நபி அவர்களுக்கு அல்லாஹ் மன ஆறுதலையும் மகிழ்ச்சியையும் உருவாக்குவதற்காக மிஃராஜ் என்ற விண்ணேற்ற பயணத்தின் மூலம் நபியை தன்னிடத்திற்கு நேரடியாக அழைத்து இந்த தொழுகையை கொடுத்தான்.
ஆரம்பத்தில் ஐம்பது நேரத்தொழுகையாக ஆக்கப்பட்டு பின் ஐந்தாக ஆக்கப்பட்டு இந்த ஐந்தில் ஐம்பதின் நன்மை உண்டு என்ற வாக்கோடு அல்லாஹ் இதை கொடுத்து அனுப்பினான்.

எனவே [1]எப்போதும் விட அனுமதி இல்லை, [2]இதை தொழுதால் எல்லா துன்பங்களும் நீங்கி விடும்,[3]இந்த ஐந்து நேரத்தொழுகையையும் ஒருவர் தொழுதால் அவருக்கு ஐம்பது நேரம் தொழுத நன்மை வழங்கப்படும்,

எனவே விடாமல் தொழுதால் தொடாது துன்பம். இந்த வீடியோவை பாருங்கள் மெய் சிலிர்க்கிறது,அல்லாஹு அக்பர் கபீரா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக