ஞாயிறு, 5 பிப்ரவரி, 2012

தாய், சேய்.


அம்மா:செல்லமே என் செல்வமே!-எனக்கு
சொந்தமான தங்கமே !
வெந்த இதயத்தோடு நொந்து நொந்து 
துடிக்கிறேன் .......!
அன்னமூட்டும் உன்னை
அள்ளி அணைக்க ஆசைதான்-ஆனால்
என்ன செய்ய எனக்கு இறைவன்,இரண்டு 
கரங்களையும்தான் பிடுன்கிட்டானே
மகன்:
கலங்காதே அம்மா! காப்பாற்றும் அல்லாஹ்
நம்மை கைவிட மாட்டான்.
கையினால் அணைக்கா விட்டால் என்ன
கருவுக்குள் என்னை கவனமாய்
சுமந்து காத்தவள் நீயல்லவா?
உயிர் கொடுத்து எனக்கு உலகத்தைக்
காட்டிய உன்னை நன்றியோடு-என்றும்
காப்பாற்றுவேன்.
9 ·  · 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக