ஞாயிறு, 5 பிப்ரவரி, 2012

எனக்குள் பூத்தவை எப்படி இருக்கு?[2]

வலிக்கிறது உள்ளே 
வாழ்க்கையின் சூழல் கண்டு,
விழித்திரையில் கண்ணீரோடு
விம்முகிறேன் தினம் தினம்.

அர்த்தமுள்ள வாழ்க்கை எங்கே?
வருத்தத்தோடு தேடுகிறேன்,
பெருத்த ஏமாற்றமே -என்னுள்
திருத்தங்களின் எதிர்பார்ப்புகள்,

சிலரின் போலித்தனங்கள்
சிரிப்புகளை எல்லாம் சந்தேகிக்கிறது
நல்லவர்களே ஆனாலும்
நாடிப்பிடித்து பார்க்கச்சொல்கிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக