ஞாயிறு, 5 பிப்ரவரி, 2012

பொன்மொழிகள்


எதற்கும் அஞ்சாதே, எதையும் வெறுக்காதே, யாரையும் ஒதுக்காதே. உன் பணியை ஊக்கமுடன் செய்.

- அரவிந்தர்.

தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தாத மனிதன் தனக்குள் உள்ள திறமையையும் வெற்றியாக மாற்ற முடியாது.

- எட்கார் ஆலன்யோ.

யாரும் எதையும் சொல்லலாம். ஆனால் எல்லோருடைய சொல்லையும் நம்பாதீர்கள்.

- மாண்டேயின்.

அறிவை விலைக்கு வாங்க முடியும். ஆனால் உணர்ச்சி, அன்பு ஒருநாளும் சந்தைக்கு வருவதில்லை.

- ஜே. ஆர். லெவல்.

வாழ்க்கையில் சவால்களைச் சந்தித்து இறுதிகாலம் வரையில் உற்சாகத்துடன் வாழும் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும்.

- மால்ட்ஸ்.

கோபம் என்பது வைர அட்டிகை போன்றது. அதை எப்போதும் அணிந்திருந்தால் அதன் மதிப்பு போய்விடும். வைரமா? என்கிற சந்தேகமும் வந்துவிடும்.

- அனுராதாரமணன்.

மனிதனை அழிக்கக்கூடிய ஒரே விஷயம் அழிவில் நம்பிக்கை வைப்பதே.

- மார்ட்டின் புபெர்.

இளைத்துப் போன குதிரைக்கு அதனுடைய சொந்த வால் கூட சுமையாகத் தெரிகிறது. ஆனால் அது உண்மையல்ல.

- ஓட்பே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக