ஞாயிறு, 5 பிப்ரவரி, 2012

கண்ணீர்**


அம்மா பாசத்தில்
அப்பா இயலாமையில்
அண்ணன் பாகத்தில்
அக்கா அவசியத்தில்
தங்கை ரகசியத்தில்


தம்பி தவறுகளில்
கணவன் பிரவசத்தில்
மனைவி அவசரத்தில்
உறவுகள் மரணத்தில்
நட்பு பிரிவில்
காதலி கைவிடலில்
காதலன் நிராகரிப்பில்


குழந்தை பசியில்
முதலாளி நஷ்டத்தில்
தொழிலாளி கஷ்டத்தில்
போராளி வெற்றியில்
மாணவன் தோல்வியில்
அரசன் அழிவில்
அடிமை இழிவில்
வீடற்றவன் மழையில்


விழும் கண்ணீரில்
வழிகிறது
ஆயிரம் அர்த்தங்கள் -nantri:krpsenthil.com

இந்த கண்ணீரையெல்லாம் விட
சிறந்த கண்ணீர் எது தெரியுமா?

நபி ஸல் அவர்கள் கூறுகிறார்கள்:
இரு துளிகள் அல்லாஹ்விடம் மிக மதிப்பு வாய்ந்ததாகும்[1]அல்லாஹ்வின் பாதையில் போராடிய போது சிந்தப்படும் இரத்தத்துளி,[2] அல்லாஹ்வை அஞ்சி அழும்போது சிந்தப் படும் கண்ணீர் துளி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக