ஞாயிறு, 5 பிப்ரவரி, 2012

எனக்குள் பூத்தவை,எப்படி இருக்கு?[1]

பயம் கவ்வி இழுக்கிறது 
பார்த்து பார்த்து நடந்தாலும்,
புதர் போன்று ஆபாசங்கள்-அதில் 
புதைந்திடுவோமோ என்று.

ஒழுக்கமற்ற உரசல்களால்...
உள்ளுக்குள் பல கீறல்கள்,அதனால்
ஒளி இழந்த உள்ளம்
உண்மையை கண்டு நடுங்குகிறது.

இறையருள் இன்றி
இரட்ச்சிப்பு இல்லை -இங்கே
இதயங்கள் இலங்கிட -எம்மை
ஏற்றருள் அல்லாஹ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக