ஞாயிறு, 5 பிப்ரவரி, 2012

மகிழ்ச்சியாக வாழ..


ஒரே மாதிரியான செயல்களாலும், அனுபவங்களாலும் வாழ்க்கை சலிப்படைந்து விடாமல் இருக்க
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான அனுபவங்களை
உருவாக்கிக் கொள்ளுங்கள்.
***************
உங்களது அன்றாட
நிகழ்வுகளைக்கூட சிற்சில மாறுதல்களுடன்
வெவ்வேறு விதமாக பதிவு செய்யுங்கள்.
***************
எப்பொழுதும் சுறுசுறுப்பாக எதாவது ஒரு செயலைச்
செய்து கொண்டிருங்கள்.அந்தப் பழக்கம் உங்களை சலிப்படையாமல் இருக்கச் செய்யும்.
***************
ஒரெ மாதிரியான செயல்கள் உங்களை போரடிக்கச் செய்யாமல் இருக்க இடையிடையே வெவ்வேறு வேலைகளின் பக்கமும் கவனம் செலுத்துங்கள்.
***************
நகைச்சுவை நிகழ்ச்சிகளை ரசியுங்கள்.
***************
நகைச்சுவை உணர்வுடன் சந்தோஷமாகப் பேசுங்கள்.
***************
நல்ல நகைச்சுவைப் புத்தகங்களைப் படித்து மனம் விட்டுச் சிரியுங்கள்.
***************
மன இறுக்கத்தையும் சோர்வினையும் மாற்றிக்கொள்ளுங்கள்.
***************
மகிழ்ச்சி உங்கள் வசமாகும்.
***************
நன்றி:- நாகை.எஸ்.பாலமுரளி.சென்னை.

கண்ணீர்**


அம்மா பாசத்தில்
அப்பா இயலாமையில்
அண்ணன் பாகத்தில்
அக்கா அவசியத்தில்
தங்கை ரகசியத்தில்


தம்பி தவறுகளில்
கணவன் பிரவசத்தில்
மனைவி அவசரத்தில்
உறவுகள் மரணத்தில்
நட்பு பிரிவில்
காதலி கைவிடலில்
காதலன் நிராகரிப்பில்


குழந்தை பசியில்
முதலாளி நஷ்டத்தில்
தொழிலாளி கஷ்டத்தில்
போராளி வெற்றியில்
மாணவன் தோல்வியில்
அரசன் அழிவில்
அடிமை இழிவில்
வீடற்றவன் மழையில்


விழும் கண்ணீரில்
வழிகிறது
ஆயிரம் அர்த்தங்கள் -nantri:krpsenthil.com

இந்த கண்ணீரையெல்லாம் விட
சிறந்த கண்ணீர் எது தெரியுமா?

நபி ஸல் அவர்கள் கூறுகிறார்கள்:
இரு துளிகள் அல்லாஹ்விடம் மிக மதிப்பு வாய்ந்ததாகும்[1]அல்லாஹ்வின் பாதையில் போராடிய போது சிந்தப்படும் இரத்தத்துளி,[2] அல்லாஹ்வை அஞ்சி அழும்போது சிந்தப் படும் கண்ணீர் துளி.

தாய், சேய்.


அம்மா:செல்லமே என் செல்வமே!-எனக்கு
சொந்தமான தங்கமே !
வெந்த இதயத்தோடு நொந்து நொந்து 
துடிக்கிறேன் .......!
அன்னமூட்டும் உன்னை
அள்ளி அணைக்க ஆசைதான்-ஆனால்
என்ன செய்ய எனக்கு இறைவன்,இரண்டு 
கரங்களையும்தான் பிடுன்கிட்டானே
மகன்:
கலங்காதே அம்மா! காப்பாற்றும் அல்லாஹ்
நம்மை கைவிட மாட்டான்.
கையினால் அணைக்கா விட்டால் என்ன
கருவுக்குள் என்னை கவனமாய்
சுமந்து காத்தவள் நீயல்லவா?
உயிர் கொடுத்து எனக்கு உலகத்தைக்
காட்டிய உன்னை நன்றியோடு-என்றும்
காப்பாற்றுவேன்.
9 ·  · 

பொன்மொழிகள்


எதற்கும் அஞ்சாதே, எதையும் வெறுக்காதே, யாரையும் ஒதுக்காதே. உன் பணியை ஊக்கமுடன் செய்.

- அரவிந்தர்.

தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தாத மனிதன் தனக்குள் உள்ள திறமையையும் வெற்றியாக மாற்ற முடியாது.

- எட்கார் ஆலன்யோ.

யாரும் எதையும் சொல்லலாம். ஆனால் எல்லோருடைய சொல்லையும் நம்பாதீர்கள்.

- மாண்டேயின்.

அறிவை விலைக்கு வாங்க முடியும். ஆனால் உணர்ச்சி, அன்பு ஒருநாளும் சந்தைக்கு வருவதில்லை.

- ஜே. ஆர். லெவல்.

வாழ்க்கையில் சவால்களைச் சந்தித்து இறுதிகாலம் வரையில் உற்சாகத்துடன் வாழும் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும்.

- மால்ட்ஸ்.

கோபம் என்பது வைர அட்டிகை போன்றது. அதை எப்போதும் அணிந்திருந்தால் அதன் மதிப்பு போய்விடும். வைரமா? என்கிற சந்தேகமும் வந்துவிடும்.

- அனுராதாரமணன்.

மனிதனை அழிக்கக்கூடிய ஒரே விஷயம் அழிவில் நம்பிக்கை வைப்பதே.

- மார்ட்டின் புபெர்.

இளைத்துப் போன குதிரைக்கு அதனுடைய சொந்த வால் கூட சுமையாகத் தெரிகிறது. ஆனால் அது உண்மையல்ல.

- ஓட்பே.

المسلمون يصلون في كل مكان Muslims pray in every place

தொழுகை மிக முக்கியமான கடமை,அதை எந்த சூழ்நிலையிலும் விடுவதற்கு அனுமதி இல்லை,மனிதன் தன் சுய நினைவில் இருக்கும் வரை அதை நிறைவேறியே ஆக வேண்டும் அபாயங்கள் நிறைந்த போரிலும் கூட தொழுகை நேரம் வந்தால் அதை விட்டு விடாமல் எவ்வாறு தோழ வேண்டும் என்ற சட்டத்தை குர்ஆனில் அல்லாஹ் கூறியதிலிருந்தே அதன் முக்கியத்துவம் புரிகிறதல்லவா?

தொழுகை கடமையாக்கப்பட்ட காலம் இடம் எது என கவனித்தாலே அதன் முக்கியத்துவம் நமக்கு விளங்கும்.
நபி [ஸல்]அவர்களின் மக்கா வாழ்வில் மார்க்க பிரச்சாரத்தை செய்து கொண்டிருந்த சமயம் அதனால் ஏற்பட்ட துன்பங்கள் என்ன என்று நமக்கெல்லாம் நன்றாக தெரியும் அப்போது நபிக்கு பெரிதும் உதவியாக இருந்தவர்கள் இருவர் [1]அபூதாலிப் [2]அன்னை கதீஜா[ரலி]ஆவர்.
இவ்விருவரும் மரணமடைந்த சமயம் காபிர்கள் அன்னாருக்கு இன்னும் அதிக துன்பங்களை கொடுக்க ஆரம்பித்தனர்,

இதை அடுத்து தாயிப் என்ற ஊருக்கு சென்று பிரச்சாரம் செய்ய சென்ற போது ஏற்பட்ட துயரங்கள் மிக கடுமையானவை,இவ்வாறு பல வகையில் உடலாலும் மனதாலும் பாதிக்கப்பட்டு கொண்டிருந்த நபி அவர்களுக்கு அல்லாஹ் மன ஆறுதலையும் மகிழ்ச்சியையும் உருவாக்குவதற்காக மிஃராஜ் என்ற விண்ணேற்ற பயணத்தின் மூலம் நபியை தன்னிடத்திற்கு நேரடியாக அழைத்து இந்த தொழுகையை கொடுத்தான்.
ஆரம்பத்தில் ஐம்பது நேரத்தொழுகையாக ஆக்கப்பட்டு பின் ஐந்தாக ஆக்கப்பட்டு இந்த ஐந்தில் ஐம்பதின் நன்மை உண்டு என்ற வாக்கோடு அல்லாஹ் இதை கொடுத்து அனுப்பினான்.

எனவே [1]எப்போதும் விட அனுமதி இல்லை, [2]இதை தொழுதால் எல்லா துன்பங்களும் நீங்கி விடும்,[3]இந்த ஐந்து நேரத்தொழுகையையும் ஒருவர் தொழுதால் அவருக்கு ஐம்பது நேரம் தொழுத நன்மை வழங்கப்படும்,

எனவே விடாமல் தொழுதால் தொடாது துன்பம். இந்த வீடியோவை பாருங்கள் மெய் சிலிர்க்கிறது,அல்லாஹு அக்பர் கபீரா.

எனக்குள் பூத்தவை எப்படி இருக்கு?[2]

வலிக்கிறது உள்ளே 
வாழ்க்கையின் சூழல் கண்டு,
விழித்திரையில் கண்ணீரோடு
விம்முகிறேன் தினம் தினம்.

அர்த்தமுள்ள வாழ்க்கை எங்கே?
வருத்தத்தோடு தேடுகிறேன்,
பெருத்த ஏமாற்றமே -என்னுள்
திருத்தங்களின் எதிர்பார்ப்புகள்,

சிலரின் போலித்தனங்கள்
சிரிப்புகளை எல்லாம் சந்தேகிக்கிறது
நல்லவர்களே ஆனாலும்
நாடிப்பிடித்து பார்க்கச்சொல்கிறது

எனக்குள் பூத்தவை,எப்படி இருக்கு?[1]

பயம் கவ்வி இழுக்கிறது 
பார்த்து பார்த்து நடந்தாலும்,
புதர் போன்று ஆபாசங்கள்-அதில் 
புதைந்திடுவோமோ என்று.

ஒழுக்கமற்ற உரசல்களால்...
உள்ளுக்குள் பல கீறல்கள்,அதனால்
ஒளி இழந்த உள்ளம்
உண்மையை கண்டு நடுங்குகிறது.

இறையருள் இன்றி
இரட்ச்சிப்பு இல்லை -இங்கே
இதயங்கள் இலங்கிட -எம்மை
ஏற்றருள் அல்லாஹ்