தஜ்ஜாலின் வருகை பற்றி எல்லா இறைதூதர்களும்
எச்சரித்துள்ளனர். அவன்
ஒற்றைக்கண்ணன்.உங்களின் இறைவன் ஒற்றக்கண்ணன் அல்லன்.அவனது இரு கண்களுக்கிடையே”
காஃபிர்-இறைமறுப்பாளன்”
என எழுதப்பட்டிருக்கும் என நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள்,தஜ்ஜாலின் ஒரு கண்
திராட்சைபோன்று சுருங்கி இருக்கும்,அவன் வெள்ளை நிறத்தவனாக
இருப்பான்.அவன் உடல் கவர்ச்சியாக இருக்கும்.
சற்று குண்டாக இருப்பான், பின்புறத்திலிருந்து நோக்கினால் அவனது தலைமுடி சுரு்
சுருளாக இருக்கும்,பரந்த நெற்றியுடையவனாக
இருப்பான். குள்ளமானவனாகவும், கால்கள் இடைவெளி அதிகமுள்ளவனாகவும்
இருப்பான்.
அவனின் ஒரு கண் ஊனம்.மறுகண் பச்சை நிறக்கல் போலிருக்கும் என்பது தான் அவனது
தோற்றத்தில் வித்தியாசமானவை ஆகும். இவையே தஜ்ஜால் பற்றிய சரியான அறிமுகம் ஆகும்.
இவை தவிர அவன் பற்றி கற்பனையாகக் கூறப்படுபவை யாவும் பொய்யான தகவல்கள் ஆகும்.
தஜ்ஜால் எல்லா ஊர்களுக்கும் சென்று தனது மாயா ஜாலங்களால் மக்களை
வழிகெடுப்பான்.
“அவன் நாற்பது நாட்கள் பூமியில்
வாழ்வான்.அனைத்து இடற்களுக்கும் செல்வான். ஆனால் மஸ்ஜிதுல் ஹராம்,
மதீனா பள்ளி வாசல்,தூர் மஸ்ஜித், பைத்துல் முகத்தஸ் ஆகிய நான்கு
பள்ளிவாசல்களையும் அவனால் நெருங்க முடியாது.
தஜ்ஜாலின் குழப்பங்களிலிருந்து தங்களையும் காப்பாற்றி,
ஈமானையும் பாதுகாத்திட நபி(ஸல்) இரு வழிகளைக்
கற்றுத் தந்துள்ளார்கள்.
அவன் சிரியா
செல்லும் வழியில் நபி ஈஸா(அலை) அவர்களால் கொல்லப்படுவான். அதன் பின் ஈஸா(அலை)
அவர்கள் இந்த பூமியில்
நாற்பது ஆண்டுகள் நேர்மையான தலைவராக இருந்து மக்களை வழிநடத்துவார்கள் என நபி (ஜல்)
அவர்கள் கூறினார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக